Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
மனித உரிமைகளை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி, வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது
வவுனியா பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், வவுனியா நகரில் இருந்து வைரவபுளியங்குளம் வரை ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முத்தையா மண்டபத்தில் கூட்டமொன்றினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, நவசமாஜக்கட்சி, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பு, புதிய மாக்சிச லெனின் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசே காணாமல் போனோர் தொடர்பில் பதில் சொல், விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய், இராணுவமே இராணுவமே வெளியேறு, காணிகளை விடுதலை செய், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்து, அரசே அரசே தமிழ் மக்களுக்கு நீதியைத் தா, தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்து என பல சுலோகங்கனை ஏந்தியிருந்தனர்.
இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், மாக்சிச லெனின் கட்சியின் தலைவர் செந்தில்வேல், ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடாகப் பேச்சாளர் பாஸ்கரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago