Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 மே 05 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கை போக்குவரத்து சபை, மன்னார் டிப்போ பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
காலை 4 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்ட பணிபுறக்கணிப்பு காரணமாக மன்னாரில் இருந்து உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து பஸ் சேவைகள் தடைப்பட்டிருந்தன.
மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள டிப்போவுக்கு முன் ஒன்று கூடிய பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
'எமது நீண்ட கால பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வேண்டும், காலாவதியான கணக்காளரே உமது ஓய்வு எப்போது, இனியும் ஏமாற்ற வேண்டாம், இன்றே முடிவு தாருங்கள், கணக்காளர் ஒருவரின் தனிப்பட்ட நலனுக்காக 220 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதா? உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை காட்சிப்படுத்திய நிலையில் இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மன்னார் டிப்போவுக்கு உரிய காணக்காளர் காரியாலயம் நீண்ட காலமாக வவுனியாவில் இயங்கி வருகின்றது. இதன் காரணமாக தொழிலாளர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மன்னார் சாலையில் 300 க்கும் அதிகமானவர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களின் சகல வித தேவைகளுக்கும் வவுனியாவுக்குச் சென்று வர வேண்டியுள்ளது.
இந்தநிலையில், மன்னார் டிபபோவுக்கான காணக்காளர் காரியாலயத்தை உடனடியாக மன்னாருக்கு மாற்றி, தகுதியான கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த பிரச்சினைகள் குறித்து பல தடவைகள் உரியவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்ற போதும் மன்னார் டிப்போ தொடர்பில் அதிகாரிகள் அக்கறை இன்றி செயற்பட்டு வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்ற இடத்துக்கு வந்த வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
எனினும், உரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு தீர்வினை பெற்றுத் தரும்வரை பகிஷகரிப்பை கைவிட போவதில்லை என்று ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும், இந்த பணிபுறக்கணிப்பு காரணமாக பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago