Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 02 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்பயிர்ச் செய்கையில், கோரையின் தாக்கம் அதிகளவு காணப்படுவதாகவும் இதனால் நெற்பயிர்ச் செய்கை பாதிப்படைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4 வருடங்களாக கோரையின் தாக்கம் காணப்பட்ட போதும், தற்போது அந்நிலைமை பன்மடங்கு அதிகரித்து காணப்படுவதாகவும் கோரையினத்தைச் சேர்ந்த 'சந்தனக் கோரை'யின் தாக்கமே இங்கு காணப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த சந்தனக் கோரையினைக் கட்டுப்படுத்துவதற்கு, விவசாயிகள் பல்வேறு வகையான களை நாசினிகளைப் பயன்படுத்திய போதிலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் இவை, நெற்பயிர்ச்செய்கையின் வளர்ச்சியை தடுத்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மன்னாரில் தற்போது அறுவடைக்கான காலம் நெருங்கியுள்ள நிலையில், இந்த கோரையின் தாக்கத்தால் சிறந்ததோர் அறுவடையின் பலனை அடைய முடியாதுள்ளதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago