2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மல்லாவியில் அடிக்கல் நாட்டு நிகழ்வு

Niroshini   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துனுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 267 மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ கல்வி, சமூக, பொருளாதார, பண்பாட்டு விழுமியங்களை கட்டிக்காக்கும் அமைப்பாக 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக்கப்பட்ட ஒளிரும் வாழ்வு அமைப்பானது இதன் அங்கத்தவர்களுக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது

இதன் ஒரு கட்டமாக இந்த அமைப்புக்கான ஒரு கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று காலை 10.00 மணிக்கு மல்லாவியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா  அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

இத்தோடு துனுக்காய் பிரதேச செயலக பிரிவிலே  மல்லாவி மத்திய கல்லுரியில் இயங்கிவரும் விசேட தேவையுடையவர்களின் பிள்ளைகளின் போக்குவரத்து வசதிக்காக 13 சைக்கிள்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் துனுக்காய் பிரதேச செயலாளர் பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X