Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 25 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு தொகுதி மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிகழ்வு, புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை செயலகத்தில் நேற்று (24) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது, 200 வரையான மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு, மாவீரர் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் முதலில் மூத்த மாவீரர் பசீலனின் தாயார் பொதுச்சுடரை ஏற்றியதைத் தொடர்ந்து, மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் துணைவியர்கள் ஏற்றிவைத்துள்ளார்கள்.
தொடர்ந்து, பந்தலில் வைக்கப்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெற்றோர்கள் உறவினர்கள், துணைவியர்கள் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்கள்.
இதன்போது, வருகை தந்த அனைத்து மாவீரர்களின் உறவுகளுக்கும் மாவீரர்களின் திருவுருப்படங்களும், தென்னங்கன்றும் நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
11 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago