Editorial / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனின் ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், முகமாலை ஞான வைரவர் கோவில் புனரமைக்கப்படவுள்ளதாக, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்தார்.
இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு ஒதுக்கப்பட்ட ஊரெழுச்சி வேலைத் திட்ட நிதியிலிருந்து 0.5 மில்லியன் ரூபாயும் அமைச்சர் மனோ கணேசனின் 0.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழும், இந்த கோவில் புனரமைக்கப்படவுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
அண்மையில், முகமாலை ஞான வைரவர் கோவிலுக்குச் சென்ற பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், அங்கு கோவில் நிர்வாகத்தினரைச் சந்தித்து உரையாடிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026