2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் தொழிற்சந்தை

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், பெரெண்டினா நிறுவனம் என்பன ஏற்பாடு செய்துள்ள முல்லைவிடியல் - 2 மாபெரும் தொழிற்சந்தை, ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் நாளை மறுதினம் (04) காலை 09 மணி முதல் பி.ப 01 மணி வரை நடைபெறவுள்ளது. 

அன்றையதினம் 15 முன்னணி தொழில் தருநர்கள் 800க்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகளுடன் வருகைதரவுள்ளனர். இதன்போது, தரம் 08 முதல் பல்கலைக்கழக பட்டதாரிகள் வரை பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம். 

 இத்தொழில் வாய்ப்புகளை இளைஞர், யுவதிகள் கையகப்படுத்தும் முகமாக, அவர்களை தயார்படுத்தும் செயலமர்வு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நாளை (03) காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .