2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

Editorial   / 2017 ஜூலை 10 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கடற்பரப்பில் நடைபெறுகின்ற சட்டவிரோதத் தொழில்களைத் தடைசெய்யுமாறு கோரி, மீனவர்கள் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிலையில், மாவட்ட செயலகம் முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை, மீனவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

மீனவர்களை, வட மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

தடைசெய்யப்பட்ட தொழில்களுக்கு, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மறைமுகமாக ஆதரவு வழங்குவதாகவும் அவர்கள் இலஞ்சம் பெற்று, குறித்த தொழிலுக்கு அனுமதி வழங்குவதாகத் தாம் எண்ணுவதாகவும் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடித் தொழில் அதிகரித்துள்ளதாகவும் இவற்றைக் கட்டுப்படுத்துமாறு கோரி, குறித்த போராட்டத்தை மீனவர்கள் மேற்கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .