2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் படுகாயம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, விசுவமடு 12ஆம் கட்டை பிரதான வீதியில், நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு 09 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் கை;கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, மாடொன்று வீதிக்கு குறுக்காகப் பாய்ந்துள்ளமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

விசுவமடு இளங்கோபுரத்தைச் சேர்ந்த காந்தரூபன் (வயது 22) மற்றும் நளன் (வயது 20) ஆகிய இருவருமே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். 

இதேவேளை, குறித்த மாடும் உயிரிழந்துள்ளது. படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரனைகளை புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X