2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மாணவியின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி

Niroshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா, உக்குளாங்குளத்தில் 14 வயது மாணவி வன்புணர்வுக்குட்படுத்திக் கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று  முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, பொதுச் சந்தையில் இருந்து ஆரம்பமாகி, மாவட்டச் செயலகம் வரை சென்றது.

இதன்போது, மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது. இதேவேளை, பொலிஸ்மா அதிபரிடமும் மகஜரொன்றை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X