2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முதியோர் சங்க உறுப்பினர்களை வலுவூட்டுவதற்கான செயலமர்வு

Thipaan   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முதியோர் சங்க உறுப்பினர்களை வலுவூட்டுவதற்கான முழுநாள் செயலமர்வு வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த கிராம மட்ட முதியோர் சங்கங்களின் 25 அங்கத்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

வளவாளர்களாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி மாசிலாமணி ஜெயராசா, மாவட்ட உளவள அலுவலர் தேவராசா துஸ்யந்தன், மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதியோர் சங்கங்களின் செயற்பாடுகள் சமூகத்துக்கு எவ்விதம் பயன்படும், முதியோர்களின் உளநல மேம்பாடு, அவர்களின் சுகாதார நிலைமை போன்ற விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X