2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மீனவர்கள் தமது தொழிலை சுமூகமாக மேற்கொள்ள வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்

Sudharshini   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

மீனவர்;கள் கடந்த காலங்களில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். எனவே, தற்போதைய சூழலில் அவர்கள் தமது வாழ்வாதாரத் தொழில்களை சுமூகமாக மேற்கொள்;வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு  சனிக்கிழமை (02)  விஜயம் செய்த கடற்றொழில் நீரியில் வளத்துறை அமைச்சர் மகிந்த அமர வீரவை வரவேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், 'மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாதுகாப்பு படையினர் மற்றும் கடற்படையினர்  ஒத்துழைப்புக்களை  வழங்க வேண்டும். முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் மாவட்ட ஒருங்கிணைப்;புக் குழுக்கூட்;டங்களிலும் முன்வைக்கப்பட்டு வந்;துள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கினர். தற்போது காணப்படுகின்ற சுமூகமான சூழலில் தமது வாழ்;வாரத் தொழில்;களை மேற்கொள்ளும் வகையில் அவர்களது பிரச்சனைகளை தீர்க்;க வேண்டியுள்ளது' என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X