2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர், நேற்றுத் திங்கட்கிழமை (03) இரவு 8 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

காரைநகரைச் சேர்ந்த கனகராசா கோபிநாத் (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகள், இரவு – பகலாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவுப் பணியில் ஈடுபட்ட இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம், கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .