Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2016 ஜனவரி 30 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்துக்குச் சொந்தமான முக்கால் ஏக்கர் காணி, தற்போது நகர அபிவிருத்தி திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த காணியை மாற்றுத்திறனாளிகள் சங்கத்துக்கு பெற்றுக்கொடுப்பதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.
இதன்போது, கிளிநொச்சி மாற்றுத்திறனாளிகள் சங்கம் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள முக்கால் ஏக்கர் காணியில் இயங்கியது. அதன்போது, 1,500 அங்கத்தவர்கள் சங்கத்தில் இருந்தனர். தொடர்ந்து யுத்தம் காரணமாக மேற்படி சங்கம் இயங்கவில்லை.
2009 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர், மீண்டும் இயங்கத் தொடங்கிய சங்கத்தின் காணியானது நகர அபிவிருத்தித் திட்டமிடலின் கீழ் உள்வாங்கப்பட்டு, சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தங்களுக்கு தற்போது 5,000 அங்கத்தவர்கள் இருக்கின்றனர் எனவும், அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வந்து செல்வதற்கு தங்களின் சொந்தக் காணியே பொருத்தமுடையதாக இருக்கும் என்றும், அதனைப் பெற்றுத் தருமாறு சங்கம் பலதரப்பினரிடமும் கோரிக்கை முன்வைத்தது.
இக்கோரிக்கை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, காணியை பெற்றுக்கொடுப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Jun 2025
29 Jun 2025