2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் 1,31,733 பேர் மீள் குடியேற்றம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 08 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 41,322 குடும்பங்களைச் சேர்ந்த 1,31,733 பேர் மீள் குடியேறியுள்ளதாக மாவட்ட செயலகப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற்படி 41322 குடும்பங்களைச் சேர்ந்த 1,31733 பேர் மீள்குடியேறியுள்ளனர்.
 
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 3,738 குடும்பங்களைச் சேர்ந்த 11,741 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 2,867 குடும்பங்களைச் சேர்ந்த 9,058 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் 5,823 குடும்பங்களைச் சேர்ந்த 19,063 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்; பிரிவில் 13,018 குடும்பங்களைச் சேர்ந்த 41,528 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 12,540 குடும்பங்களைச் சேர்ந்த 39,154 பேரும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 3,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,189 பேரும் மீள்குடியேறியுள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X