Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
ஆயுதம் தாங்கிய புகைப்படமொன்றைத் தனது பேஸ்புக்கில் பதிவேற்றியமை தொடர்பில், வவுனியாவை சேர்ந்த இளைஞன் ஒருவரிடம், 3 மணிநேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 2ஆம் மாடியில், பயங்கரவாதக் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் நேற்று (30) முற்பகல் 9 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை, இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
அண்மையில், வவுனியாவில் உள்ள அரசியல் கட்சியொன்றின் இளைஞர் அணித் தலைவரின் ஆயுதம் தாக்கிய புகைப்படமொன்றைத் தனது பேஸ்புக்கில் பதிவேற்றமியமை தொடர்பிலேயே, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அப்புகைப்படம் நீண்ட நாள்களுக்குப் பின்னர் ஏன் பதிவிடப்பட்டது என்பது தொடர்பிலும் அச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளவர்களின் விவரங்கள் தொடர்பிலும், அவ்விளைஞனிடம் விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
33 minute ago
41 minute ago