2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வலயக் கல்விப்பணிப்பாளர் இன்மையால் கல்வி செயற்பாடுகள் பாதிப்பு

George   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்த வடமாகாண கல்வியமைச்சு, 10 நாட்கள் கடந்தும் துணுக்காய் வலயத்துக்கான புதிய கல்விப் பணிப்பாளரை நியமிக்காததன் காரணமாக துணுக்காய் வலயப் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளிலே பல்வேறு நிகழ்வுகளை நடத்தவேண்டிய நிலையில் அவ் நிகழ்வுகளை வலயக்கல்விப் பணிப்பாளர் இல்லாது நடத்துவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

துணுக்காய் வலயப் பாடசாலைகளின் நெருக்கடி நிலைமையை கருத்தில்கொண்டு துணுக்காய் வலயத்துக்கு உடனடியாக புதிய வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்கும்படி பெற்றோர்களினாலும் ஆர்வலர்களினாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

துணுக்காய் வலயத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கும் பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியவர், ஊழல் மற்றும் மோசடி செய்தவர் எனவும் அவரை இடமாற்றம் செய்யுமாறு துணுக்காய் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தமையால், மடு வலயத்துக்கு பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X