Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 28 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா - கணேசபுரத்தில், அண்மையில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் சிறுமிக்கு நிதி வேண்டியும், வடக்கு பெண்கள் நாடாளுமன்ற அமைப்பு மற்றும் வடக்கு பெண்கள் அமைப்பு ஆகியன இணைந்து, வவுனியா, பொலிஸ் நிலைத்துக்கு முன்பாக இன்று (28) கண்டன ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தன.
வவுனியா, பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம், பொது வைத்திய வீதி ஊடாக வவுனியா மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது.
இதன்போது, வவுனியா மாவட்டச் செயலாளர் சோமரத்தின விதான பத்திரணவிடம், மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
கடந்த 14ஆம் திகதியன்று, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்பட்டிருந்தார். இவ்விடயம் தொடர்பாக, பொலிஸாரால் 4 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
07 Jun 2025