Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
சீசேல் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 157 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர்.
கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அந்தவகையில், சீசேல் நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட பயணிகள் பம்மைபடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தநிலையில், 157 பேர் அவர்களது சொந்த இடங்களான காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கொழும்பு, குருநாகல், நீர்கொழும்பு, கேகாலை, அநுராதபுரம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
குறித்த பயணிகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு, அதில் கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் உள்ள எட்டு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் 4,072 பேருக்கும் மேற்பட்டோர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago