2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியா கல்வாரிக்கான பாதயாத்திரை ஆரம்பம்

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் இருந்து வவுனியா கல்வாரிக்கான பாதயாத்திரை நேற்று புதன்கிழமை ஆரம்பமாகியது.

வருடா வருடம் மன்னார் மறைமாவட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த வவுனியா கோவரசங்குளம் கல்வாரிக்கான பாதயாத்திரை இம்முறை பொது நிலையினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்கர்கள் வருடந்தோறும் அனுசரித்து வரும் தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த  கத்தோலிக்கர்கள் வவுனியாவில் உள்ள கோமரசன்குளம் கல்வாரிக்கு பாதயாத்திரை செல்வது வழமை.

குறித்த பாதயாத்திரையில் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல நாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் ,பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலயம், வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் ஆகியவற்றில் தங்கி நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை வவுனியா கோமரசன்குளம் கல்வாரியை சென்றடைவார்கள்.

அங்கு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் திருச்சிலுவைப்பாதை மற்றும் திருப்பலியிலும் கலந்து கொள்வர்கள்.

வவுனியா கோமரசன்குளம் கல்வாரிக்குச் செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மருத்துவ வசதிகள், குடி நீர், உணவு வசதிகள் போன்றவை ஏற்பாட்டுக் குழுவினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X