Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மே 07 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய அரசின் கிராமிய பொருளாதார அமைச்சினால் வவுனியாவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மையத்தை தாண்டிக்குளம் விவசாய பண்ணையின் பயன்படுத்தப்படாத காணியில் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து வவுனியாவில் இன்று அமைதிப்போரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதிப்பேரணியில், அபிவிருத்தியில் அரசியல் கலக்காதே, வலியவரும் வாய்ப்பை நழுவ விடாதே, மத்தியா மாகாணமா இதுவல்ல எமது பிரச்சனை மாவட்டத்தின் அபிவிருத்தியே, சந்தை வாப்பில்லாமல் நாம் படும் துன்பம் தெரியுமா, தரவில்லை என்று குறை கூறாமல் தந்ததை பயன்படுத்து, வேண்டாம் வேண்டாம் பொய்யான அறிக்கைகள் வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைபேரணியில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.
இதேவேளை இவ் ஆர்ப்பாட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான சி. சிவமோகன், முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், ஐக்கிய தேசியக் கட்சியின் வவனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாச மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
51 minute ago