2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியாவில் விபத்து: 21 பேர் காயம்

Niroshini   / 2016 மே 07 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க, எஸ்.என்.நிபோஜன்

வவுனியா, மெனிக்பாம் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் வேகக்கட்டுபாட்டையிழந்த பஸ் ஒன்று பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 கடற்படையினர் காயமடைந்துள்ளனர்.

மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி விடுமுறையில் சென்ற கடற்படையினரை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்களில் ஒன்றே அங்கிருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதுண்டு பலத்தினுள் வீழ்ந்துள்ளது.

காயமடைந்த கடற்படையினர் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X