Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஜனவரி 25 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ளுராட்சித்தேர்தலில் போட்டியிடுகின்ற, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை (24) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் எஸ்.சத்தியானந்தன் என்பவரே முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சுயேட்சை குழுவின் ஆதரவாளர்கள் 6 பேர், புதன்கிழமை (24) மாலை குறித்த வேட்பாளரின் வீட்டுக்குச் சென்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன், வேட்பாளரையும் அவரது குடும்பத்தினரையும் தாக்க முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, மாவட்ட தேர்தல் ஆணையாளர் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் குறித்த வேட்பாளரின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago