2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவில் குளறுபடி

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக அமைக்கவுள்ள 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், சேதத்தை குறைத்துக்காட்டவா என  சந்தேகம் எழுந்துள்ளதாக வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'தற்போது 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான  65,000 உருக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கு வெளிநாட்டுக்கடன் உதவியுடன் அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. அத்திட்டத்திலும் பயனாளிகளைத் தெரிவு செய்யும் படிவத்தில்  கேட்கப்படுகின்ற கேள்விகளை உற்றுநோக்கும்போது கடந்த அரசாங்கத்தின் அணுகுமுறை இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்கின்றதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த வீட்டுத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளின் தரம் ஒருபுறம் குழப்பத்தை ஏற்படுத்துகையில், பயனாளிகள் தெரிவும் எமது மக்களை மேலும் குழப்பியுள்ளது. அதேநேரம் 'தற்போதும் இடம்பெயர்ந்த முகாமில் இருக்கின்றீர்களா?' என்றவொரு வினா கேட்கப்பட்டுள்ளதே தவிர பொதுமக்களின் இழப்பீடு தொடர்பாக எவ்விதமான தரவுகளையும் பெறுவதற்கு மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் இவ்வாறானதொரு கேள்வியால் முகாமில் இல்லாத இழப்பைச் சந்தித்தவர்கள் இத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத நிலையும் உள்ளது' என தெரிவிக்கப்ட்டுள்ளது.

'மேலும், வன்னி மாவட்டத்துக்கு மட்டும் ஏறக்குறைய 40ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன.
பொதுமக்களை தமது சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றி அதிலேயே அவர்களுக்கான நிரந்தர வீடுகள் வழங்கப்படவேண்டும்.

தற்போது ஒரு வீட்டுக்கு செலவிடப்படும் 21 இலட்சம் ரூபாயில் நிரந்தமான கல் வீடுகள் இரண்டு கட்டமுடியும். அது பரம்பரை ரீதியாகவும் மக்களுக்கு பயன்தரவல்லது.

ஆகவே, அரசாங்கம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டை கட்டிக்கொடுப்பதற்கு முன்வரவேண்டும். அல்லாவிடில் இந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் மக்களுடன் வீதியில் இறங்கி போராடநேரிடும்;' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X