Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை (25) இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின்; தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (27) தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை (25) முரசுமோட்டையிலிருந்து பரந்தன் சந்திக்கு மோட்டார் சைக்கிளில் சென்;று கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தரை எதிரே வெளிச்சம் இன்றி வந்த உழவு இயந்திரம் மோதி விட்டு தப்பிச்சென்றிருந்தது.
இச்சம்பவத்தில் கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் உத்தியோகத்தரான கோரக்கன்கட்டு முரசுமோட்டையைச் சேர்ந்த இந்திரராஜா சுதர்சன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை படுகாயம் அடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சிப் பொலிஸார் விபத்துடன் தொடர்புடைய சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தை உழவு இயந்திர உரிமையாளரின் வீட்டில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.
எனினும் உழவு இயந்திர சாரதி தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago