2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞன் படுகாயம்

George   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன், படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிற்பகல் 2மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பரந்தன் பகுதியிலிருந்த கிளிநொச்சி நோக்கி சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது, வவுனியாவில் இருந்து வந்த கெப் ரக வாகனம் மோதியுள்ளது.

இதனால்,  யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துகொண்டிருந்த அரச பஸ்ஸுக்கு முன்பாக சைக்கிளில் பயணித்த இளைஞன் தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

படுகாயமடைந்த இளைஞன், உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .