2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வார இறுதி சந்தை நடத்த தீர்மானம்

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்டத்தின் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திபொருட்களுக்கு சந்தைவாய்ப்பை ஏற்படுத்த வார இறுதிச்சந்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்த கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நகரசபை செயலாளர், பிரதேச சபைகளின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்டத்திலுள்ள பெண்கள் சுய உதவிக்குழுக்கள், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின்கீழுள்ள அமைப்புகள், கைத்தொழில் அபிவிருத்திச்சபையின் கீழள்ள நிறுவனங்கள், சிறுகைத்தொழில் உற்பத்தியாளர்கள், குடிசைகைத்தொழிலாளர்கள் ஆகியோர் எதிர்நோக்கும் சந்தைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்க்கும் முகமாகவே இவ்வாறான வாரஇறுதி சந்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்முதற்கட்டமாக தமிழ், சிங்களப் புதுவருடத்தை முன்னிட்டு சித்திரை மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளது. தொடர்ந்து மாதாந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாறான வாரஇறுதி சந்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளது.

இதுதொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X