2025 ஜூலை 02, புதன்கிழமை

விளையாட்டு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு: சி.வி

Gavitha   / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வடமாகாண விளையாட்டு வீரர்களுக்கு உபகரணப்பற்றாக்குறை காணப்படுகின்றது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண தடகள விளையாட்டு விழாவை நேற்று சனிக்கிழமை (31) வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எமக்கு நடந்த துன்பியல் சம்பவங்களில் மனம் ஒன்றித்து பொழுதை கழிக்காமல், சிறந்த மன வலிமையையும் உடல் வலிமையையும் பெற நாங்கள் ஆவண செய்ய வேண்டும்' என்று அவர் கூறினார்.

இன்று விளையாட்டு வீரர்கள் நவீன முறையிலான விளையாட்டு யுக்தியை கற்றுக்கொண்டு விளையாட்டில் தேர்ச்சி பெறுவதற்கு,  உபகரணங்கள் பற்றாக்குiறாய இருத்தல் என்பது பெரும் பிரச்சினையாகும். அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்ல விளையாட்டுடரங்கங்கள் கட்டப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கு போதிய பயற்சி அளிக்கப்படவேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .