2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விழிப்புலனற்றோரின் இன்னிசை விருந்து

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விழிப்புலனற்றோர் வழங்கும் இன்னிசை விருந்து நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10)ஆம் திகதி மன்னாரில் முதல் முறையாக நடைபெறவுள்ளது. 

அன்றைய தினம், ஆசிரியை செல்வி செபமாலை பெனடிக்ரா தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் மாலை 02 மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், சிறப்பு விருந்தினராக மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல், கௌரவ விருந்தினர்களாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.செபஸ்ரியான், மன்னார் அம்பிகா ஜீவலரி உரிமையாளர் மு.செல்வகுமார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X