Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கோட்டடக்கேணி என்னும் கிராமத்திலுள்ள விவசாய நிலங்களில் அதிகளவான மிதிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மிதிவெடிகள் அற்ற பிரதேசங்கள் என்ற அடிப்படையில் இந்தப் பகுதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், இந்தப் பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதார தேவையான விவசாயச் செய்கையை மேற்கொள்ளும் பொருட்டு நிலத்தை பண்படுத்திய போது, பெருமளவான மிதிவெடிகளை அவதானித்துள்ளனர்.
தற்போது, இவர்கள் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொண்டு வரும் நிலையில், அந்தப் பகுதியில் பெருமளவான மிதிவெடிகளை அவதானித்துள்ளனர். இதனால், சுற்றுவட்டாரத்திலும் மிதிவெடிகள் அதிகம் இருக்கும் என அந்த மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
வெடிபொருட்கள் இருப்பதற்கான அடையாளப்படுத்தல் ஏதும் செய்யப்படாத நிலையில் தாங்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்வதாகவும் மாவட்டச் செயலகத்துக்கு மிதிவெடிகள் இருப்பதற்கான படங்களையும் அனுப்பி முறைப்பாட்டையும் அம்மக்கள் பதிவு செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago