2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வவுனியா மாணவி ஹரிஸ்ணவி படுகொலைக்கு நீதிகோரி, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட மகளிர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மாணவியின் கொலைக்கு நீதிகோரியும், குற்றவாளிகள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் என்ற  கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு அருகிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டம், மாவட்டச் செயலகத்தை அடைந்து அங்கு அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

நீதித்துறையே காமுகர்களை கண்டுபிடி, சட்டத்தின் முன்நிறுத்து, மரணதண்டனை வழங்கு என்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு, பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X