Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை, இன்று செவ்வாய்க்கிழமை (27) கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இந்திய மீனவர்கள் 11 பேரும் 3 படகுகளில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கடல் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், குறித்த 11 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.
தலைமன்னார் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், 11 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்டோர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவர் என்று கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.மெராண்டா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .