2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது

George   / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பேசாலை 1 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் கேரளக்கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவரை புதன்கிழமை இரவு பேசாலை பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

7 பொதிகளில் வைக்கப்பட்டிருந்த  14 கிலோகிராம் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாகவும் அவை 14 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என பொலிஸார் கூறினர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இரவு 10.30 மணியளவில் பேசாலை 1 ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த கஞ்சாப் பொதிகளை விற்பனைக்காக கொண்டு வந்த இளைஞனை கைது செய்ததோடு, குறித்த கஞ்சாப்பொதிகளையும் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞன், பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் சந்தேகநபரை ஆஜர்படுத்தவுள்ளதாக பேசாலை பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .