Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, துணுக்காய், கோட்டைக்கட்டியகுள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உயர்தர வகுப்புகளை உருவாக்குங்கள் என பெற்றோர்களால் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரனிடம் மனுக் கையளிக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய பாடசாலையில் உயர்தர வகுப்பை உருவாக்கக்கூடிய வகையில் மாணவர்கள் சாதாரண வகுப்புகளில் சித்தியடைந்து வருகின்ற போதிலும் இன்னமும், பாடசாலையில் உயர்தர வகுப்புகள் உருவாக்கப்படவில்லை.
இந்தப் பாடசாலையில் சாதாரண தரம் வரையில் படிக்கும் பிள்ளைகள் அதன் பின்னர் உயர்தர வகுப்புக்காக 18 கிலோமீற்றரிலுள்ள மல்லாவி மத்திய கல்லூரிக்கும், அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கும் போக்குவரத்தற்ற காடு வழியே பாதுகாப்பற்ற முறையில் நாள்தோறும் சென்றுவருகின்றனர். எனவே இந்தப் பாடசாலையில் உயர்தர வகுப்புகளை உருவாக்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுக்களின் பிரதிகள் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கும் கையளிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago