Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மே 06 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, கரைதுறைபற்றின் மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளுக்கான பஸ் சேவைகள் நடைபெறுவதில்லையென அம்பலவன்பொக்கணை கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது மேற்படி கிராமங்களில் 475 குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ள நிலையில், காலையில் கொழும்புக்குச் செல்லும் பஸ் மட்டும் கிராமத்துக்குள் வந்துசெல்வதாகவும் தமது கிராமங்களுக்கென்று தனியான பஸ் சேவைகள் நடைபெறுவதில்லையெனவும் 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் முல்லைத்தீவு நகரத்திலிருந்து பஸ் சேவையொன்று நடைபெற்றதாகவும் தெரிவித்த அபிவிருத்திச் சங்கம் தற்போது மீள்குடியேற்றத்தின் பின்னர் எந்த பஸ் சேவைகளும் நடைபெறுவதில்லையெனவும் தெரிவித்துள்ளது.
இதனால், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், கரைத்துறைபற்று பிரதேச செயலகம், முல்லைத்தீவு பொது மருத்துவமனை, புதுக்குடியிருப்பு நகரம் என்பவற்றிற்கு அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் வாழ்கின்ற மக்கள் பயணிப்பதில் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.
25 கிலோமீற்றர் தூரத்திலுள்ள முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு கிராமத்திலிருந்து நோயாளர்கள் செல்வதில் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் மீள் குடியேற்றத்தின் பின்னர் பஸ் சேவையை ஏற்படுத்தி தருமாறு அரசியல்வாதிகளிடமும் மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளரிடமும் பலதடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதிலும் அவை நிறைவேற்றப்படவில்லையெனவும் கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago