2025 ஜூன் 30, திங்கட்கிழமை

147 பயனாளிகளுக்கு உதவி

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்,சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வதாரத உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி- பரந்தன் சனசமூக நிலையத்தில் இன்று சனிக்கிழமை (11)இடம்பெற்றது.

தலா 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதவித்திட்டங்கள், தெரிவு செய்யப்பட்ட 147 பயனாளிகளுக்கு வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்துக்குரிய பொருட்களை வழங்கி வைத்தார்.

வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் , மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தினால் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்களிடம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் மாகாண அமைச்சர் கேட்டறிந்துகொணடார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X