Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மார்ச் 07 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
'கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடுவது போல உபஉணவுப் பயிர்ச் செய்கையிலும் கூடுதலாக ஈடுபட வேண்டும்' என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
'மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற்செய்கை தொடர்பிலான கூட்டங்களில், 4 குளங்களின் கீழான சிறுபோகச் செய்கை தொடர்பான கூட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
இரணைமடுக்குளம் புனரமைக்கப்படுவதால், அந்தக் குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்படமாட்டாது. இடைப்போகத்தில் 4 ஆயிரம் ஏக்கரில் உபஉணவு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதில்லை' என்றார்.
'கிளிநொச்சி மாவட்டம் ஒரு விவசாய மாவட்டமாகும். விவசாயிகளின் கையில் தான் மாவட்டத்தின் உணவு உற்பத்தி தங்கியுள்ளது. விவசாய முயற்சிகளில் ஈடுபடுகின்ற விவசாயிகள் சட்டத் திட்டங்களை மதிக்கின்றபோதுதான் சிறந்த பயிர்ச்செய்கையில் ஈடுபடமுடியும்.
சொந்த நிலங்களுக்குரியவர்கள் பயிர்ச்செய்கையில் கூடுதலாக ஈடுபடவேண்டும். காணிகளில் குத்தகை அடிப்படையில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றவர்களினால் பிணக்குகள் பல தோன்றியுள்ளன. எனவே, விவசாயிகள் மத்தியில் ஒற்றுமை அவசியமானது' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago