Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியாவில் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தச்சனாங்களம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது,மகளிர் அமைப்புக்களால் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை மாலை மற்றும் இன்று காலையும் உக்கிளாங்குளத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் சடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதையடுத்து, சடலம் பண்டாரிகுளம் ஊடாக எடுத்துச்செல்லப்பட்டு பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரிக்கு முன்பாக சிறிது நேரம் வைக்கப்பட்டு பின்னர் தச்சனாங்களம் இந்து மயானத்தில் நல்லடக்கத்துக்காக எடுத்து செல்லப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago