2025 ஜூலை 23, புதன்கிழமை

இதுவரை மன்னாரில் 32 எச்சங்கள் மீட்பு

Super User   / 2014 ஜனவரி 07 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், திருக்கேதிஸ்வரம் பகுதியில் இதுவரை 26 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை  காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது.

இதன்போது மேலும் 6 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர்  முன்னிலையில் சனிக்கிழமை 6ஆவது தடவையாக  தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள்; மீட்கப்பட்டன.

நேற்று வரை 26 எழும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் இன்று தொடர்ந்து தோண்டப்பட்டது. இதன்போது ஆறு எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.இதனால் இன்று வரை 32 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும் சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எழும்புக்கூடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மீண்டும் குறித்த மனித புதைகுழி எதிர்வரும் 16ஆம் திகதி வியாழக்கிழமை தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .