2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 36 எழும்புக்கூடுகள் மீட்பு

Super User   / 2014 ஜனவரி 16 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி ஏழாவது தடவையாக மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை தோண்டப்பட்டபோது மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 36 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன என அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ண தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் கடந்த  7ஆம் திகதி வரை ஆறு தடவைகள் மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மனித புதை குழி தோண்டப்பட்டன.

அவற்றில் சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டன. இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் 7ஆவது தடவையாக மனித புதை குழி தோண்டப்பட்டது.

இதன்போது புதிதாக 4 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்ட எழும்புக்கூடுகளில் ஒரு மண்டையோட்டின் வாய் முழுமையாக திறந்திருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது. குறித்த மண்டையோட்டின் வாய்ப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள அடையாளங்களும் காணப்பட்டன. மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை புதைகுழி தோண்டும் பணி இடம்பெறவுள்ளது

இதேவேளை இன்று மதியம் குறித்த மனித புதைகுழி காணப்படுகின்ற இடத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்த வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி என்.குணசீலன் அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .