2025 ஜூலை 30, புதன்கிழமை

20 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Super User   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்திய மீனவர்கள் 20 பேரை எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்த 20 மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரால் கைது செய்யப்பட்டடு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து இன்று இவர்கள் அனைவரும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே இவர்களை ஒக்டோபர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை ஏற்nகனவே கைது செய்யப்பட்ட 41 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 25ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .