2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

முள்ளியவளையில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு மண்டபம் திறப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அக்டட் நிறுவனத்தின் செம் திட்டத்தின் கீழ் சுமார் 85 இலட்சம் ரூபா செலவில் முல்லைத்தீவு முள்ளியவளை கிழக்கில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு மண்டபத்தின் திறப்பு விழா இன்று 03 ஆம் திகதி காலை இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் குறித்த கட்டடத்தை உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்து வைத்ததுடன்இ கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் எஸ்.சந்திரகாந்தனிடம் கட்டத்திற்கான திறப்பையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் கறைத்துறைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ஆர்.குருபரன்இ அக்டட் நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் கரத் பீட்டர் வோக்கர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயகுமார், கண்காணிப்பு முகாமையாளர் அகலவத்த, அக்டட் நிறுவனத்தின் மாவட்ட நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எஸ்.நித்தி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .