2025 ஜூலை 23, புதன்கிழமை

நெடுங்கேணியில் பேரூந்துகளை மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு கோரிக்கை

Super User   / 2014 ஜனவரி 26 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நெடுங்கேணியூடாக செல்லும் பேரூந்துகளை நெடுங்கேணியில் அமைந்துள்ள மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துமாறு வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தலைவர் எஸ். தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"நெடுங்கேணியில் மத்திய பேரூந்து தரிப்படம் தேவை என்பதனை கருத்தில் கொண்டு பல இலட்சம் ரூபா செலவில் பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டதுடன் கடைத்தொகுதிகளும் அமைக்கப்பட்டு அமைச்சர் றிசாத் பதியுதினினால் திறந்துவைக்கப்பட்டது.

எனினும் இதுவரை காலமும் இந்த தரிப்பிடத்தில் பேரூந்துகள் தரிக்காததுடன் விதியோரங்களில் தரிக்கப்படுகின்றது. இது போக்குவரத்துக்கு இடையூராக காணப்படுவதுடன் பயணிகளுக்கும் சிரமமாகவுள்ளது. அத்துடன் மத்திய பேரூந்து நிலையத்தை மையப்படுத்தி பொதுச்சந்தையும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

இது விவசாய பிரதேசமான வவுனியாவில் விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இலகு தன்மை கருத்தி அமைக்கப்பட்டதாகும். இவ்விடயம் தொடர்பான எமது பிரதேச சபையினால் இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கும் அறிவிக்கப்பட்ட போதிலும் அதன் முகாமைத்துவம் உரிய நடவடிகைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்துகளோ தனியார் பேரூந்துகளோ மத்திய தரிப்பிடத்தில் நிறுதுத்தாமல் வீதியோரத்தில் நிறுத்தப்படுவது இனி வரும் காலங்களில் தடுக்கப்பட வேண்டும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .