2025 ஜூலை 23, புதன்கிழமை

பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் இணைக்க உத்தரவு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதியில் பெற்றோரினால் கைவிடப்பட்ட நிலையில், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 14 வயது சிறுவனை யாழ். அச்சுவேலியிலுள்ள நன்னடத்தை பாடசாலையில் இணைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.வகாப்தீன் நேற்று (05) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் சிறு சிறு திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மேற்படி சிறுவனை, கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி எம்.முத்துக்குமார் கடந்த வாரம் அடையாளங்கண்டு, அச்சிறுவனை யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக அனுமதித்தார்.

தொடர்ந்து சிறுவனையும், அவனுடைய மருத்துவச் சான்றிதழையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று (05) ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .