2025 ஜூலை 23, புதன்கிழமை

மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து மேலும் இரண்டு மனித எழும்புக்கூடுகள் திங்கட்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையில்; திங்கட்கிழமை (17) 24 ஆவது தடவையாக குறித்த மனித புதை தோண்டப்பட்டது.

இதன்போது மேலும் இரண்டு மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு அடையாளம் காணப்படாத தடையப்பொருள் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனுடன் சேர்த்து மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் தொகை 64 ஆக அதிகரித்துள்ளது.

மீட்கப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளும் பொதிசெய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலைககு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதுவரையில் 41 மனித எலும்புக்கூடுகள் பொதிசெய்யப்பட்டு மன்னார் வைததியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை (18) 25 ஆவது தடவையாக மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த புதைகுழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .