2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்தவருக்கு தண்டம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி,  அக்கராயன்குளம் பகுதியில் தொலைபேசியில் ஆபாச படக்காட்சிகளை வைத்திருந்தவருக்கு 2500 ரூபா தண்டம் விதித்ததுடன், அவருடைய கைத்தொலைபேசியிலுள்ள காணொளியை அழித்து தொலைபேசியினை அரசுடைமையாக்குமாறும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் உத்தரவிட்டார்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கைத்தொலைபேசியில் ஆபாசப்படக்காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் புதன்கிழமை; (19) கைதுசெய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபரை புதன்கிழமை (19) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதிவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .