2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார் புதைகுழியில் நாணய வடிவிலான தடயம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 21 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஆர்.லெம்பேட்


மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 28ஆவது தடவையாக இன்று வெள்ளிக்கிழமை தோண்டப்பட்டபோது 02 மனித எலும்புக்கூடுகளுடன்,  05 ரூபா நாணய வடிவிலான தடயப் பொருளொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர் மேற்படி மனித புதைகுழியை தோண்டும் பணியை முன்னெடுத்தனர்.  இந்நிலையில், இன்றையதினத்துடனான மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆகும்.

இதேவேளை, ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட  09 எலும்புக்கூடுகளை இன்றையதினம் மீட்டு பொதி செய்து மன்னார் நீதவானின் உத்தரவுக்கமைய  மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.  இதுவரையில் 69 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மேற்படி  மனித புதைகுழியை மேலும் விரிவுபடுத்தும் முகமாக அருகிலுள்ள பற்றைகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.

மேற்படி மனித புதைகுழியின் 29ஆவது தடவையாக நாளை சனிக்கிழமையும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம்  முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.


  Comments - 0

  • ibnu aboo Friday, 21 February 2014 03:26 PM

    பின் ஒரு காலத்தில் இலங்கையில் நல்ல எரிபொருள் வளம் கிடைக்க வாய்ப்புண்டு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .