2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் அபிவிருத்திக்கான தரவுகள் சேகரிக்கும் பணி பூர்த்தி

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாகாண உள்ளூராட்சி அமைச்சின் பணிப்புரைக்கமைய, கிராமிய மட்டத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் பங்கேற்பு ரீதியான அபிவிருத்தி திட்டங்களுக்கு தரவுகள் சேகரிக்கும் பணி மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திங்கட்கிழமையுடன் (24) முவடைந்ததாக மன்னார் நகரசபை உறுப்பினர் இ.குமரேஸ் தெரிவித்தார்.

கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தரவுகள் சேகரிக்கும் பணி சுமார் 7 தினங்களுக்கு நடைபெற்றது.

மன்னார் நகரசபை  பிரிவுக்குட்பட்ட 15 கிராம அலுவலகர் பிரிவுகளை 03 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் நகரசபை உறுப்பினர்கள், கிராம அலுவலகர்கள் ஆகியோர் இணைக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன.

மேற்படி பிரிவுகளிலுள்ள மக்களைச் சந்தித்து முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அவர்களிடமே தரவுகள் சேகரிக்கப்பட்டன. இந்தத் தரவுகள் பரிசீலிக்கப்பட்டு பின் அவுஸ்திரேலியாவின் நிதியுதவியுடன் தேவையான அபிவிருத்தி திட்டங்கள்  மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .