2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 03 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் கோணாவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு  இடம்பெற்ற வாகன விபத்தில்  கோணாவில், காந்தி கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை நெல்சன்குமார் (வயது 22) என்பவர் மரணமடைந்ததாக கிளிநொச்சி பொலிஸார்  தெரிவித்தனர்.

ஒழுங்கையிலிருந்து வந்துகொண்டிருந்த உழவு இயந்திரம் வீதிக்குச் செல்ல முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானதாகவும்  பொலிஸார் கூறினர். 

படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  உழவு இயந்திரச் சாரதியை  கைதுசெய்ததுடன், உழவு இயந்திரத்தையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .