2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு தண்டம் மற்றும் சிறை

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஏ-9 பாதை கிளிநொச்சியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபருக்கு 10, 500 ரூபா தண்டம் மற்றும் இரண்டு வார கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (03) உத்தரவிட்டார்.

குறித்த நபர் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற போது, ஏ-9 வீதி கிளிநொச்சியில் வைத்து வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்ட கிளிநொச்சிப் போக்குவரத்துப் பொலிஸாரினால் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மேற்படி நபர் தொடர்ந்து இன்று (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .